காமன் வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதால் பயன் என்ன ? இதனால் இந்திய வீரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் கிடைக்க போகிறதா ? இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்கு எழுவது இயற்கையே, ஆனால் அடிமையின் மறுபிறப்பான பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் இதை பற்றி காங்கிரஸ் தலைவர்களே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
Sep 28, 2010
Sep 27, 2010
இரண்டு திரைப்படக் காட்சிகளும் சில சிந்தனைகளும்
காட்சி 1:
‘மன்னன்’ என்றொரு தமிழ்ப்படம்! தமிழகத்தின் முன்னணி நடிகர் நடித்த படம் அது! கூலித் தொழிலாளியாகத் தொடக்கத்தில் வரும் நடிகர், பின்னர் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையின் முதலாளியின் மகளை மணப்பதன் மூலம் முதலாளியாகவும் ஆகிவிடுவார். கூலித் தொழிலாளியாக இருக்கும்போது இயல்பாக இருக்கும் அவர், முதலாளியான உடன் பெரும்
Sep 26, 2010
யார் கடவுள் உயர்ந்தவர்
நேற்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘கடவுள் இல்லை’ என்று சொல்பவர்கள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் தாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் அவர் கூறினார். அவர் கூறியதை நானும் சிந்தித்துப் பார்த்தேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லோரும் கடவுள் வழியில் நடக்கிறார்களா என்ன?
Sep 24, 2010
அயோத்தியும் ,சட்டமும் ஓர் அலசல்
பாபர் மசூதி கடந்த1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய ஒரு தொழுகை இடமாக இருக்கிறது. வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச சன்னி ஜமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் டிசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்) மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு ‘இராமபெருமான் தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்’ என்று சொன்னார்கள்.
கடவுளுக்கே தீர்ப்பு - காமெடி கிளைமாக்ஸ்
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்... ராமர் அங்குதான் பிறந்தார் அதனால் இந்துக்களுக்கு சொந்தம் என்று ஒரு கூட்டம் கூறுகிறது. மற்றொரு பக்கம் பாபர் மசூதி இருந்த இடம் என்பதால் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஒன்றை மட்டும் இரு கூட்டமுமே மறந்துவிட்டது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பவர்களிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி. மனிதனை படைத்த கடவுளுக்கு கூட மனிதனால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டுமா ?