Showing posts with label மன்மோகன் சிங். Show all posts
Showing posts with label மன்மோகன் சிங். Show all posts

Sep 13, 2010

பிரதமர் ம(ண்)மோகனின் தேசிய கவலை

அருந்ததி ராய்





2010 செப்டம்பர் இருபது OUT LOOK இதழில் வெளிவந்துள்ள ஊடகவியலாளர் அருந்ததிராயின் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
Cartoon Courtesy -www.cartoonstock.com                         
            இந்திய அரசு இரண்டே இரண்டு வாரங்கள் நடத்தப்போகும் விளையாட்டுப் போட்டிக்காகத் தொள்ளாயிரம் கோடி ரூபாயைசெலவழிக்கிறது.  அத்தனையும் மக்களுடைய பணம்!  இத்தனைக்கும் தீவிரவாத அச்சுறுத்தல், மலேரியா, டெங்கு எனப் பல காரணங்களைக் கூறிப் பன்னாட்டு வீரர்கள் பலர் இப்போட்டியைப் புறக்கணித்து விட்டார்கள்.  இங்கிலாந்து இராணிக்கோ இப்போட்டிகள் (காமன்வெல்த் நாடுகள் என்பவை இங்கிலாந்திடம் அடிமைகளாக இருந்த நாடுகள் அனைத்தும்தாம்!) பற்றிக் கனவு கூட வரவில்லை.  இவ்வளவு பணத்தையும் அரசியலாளர்களும் விளையாட்டுத்துறை அலுவலர்களும் தாம் பங்கு போடப் போகிறார்கள்.  ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கு குறைவாகச் சம்பாதிக்கும் நம்முடைய மக்களுக்கு ‘இவ்வளவும் நம்முடைய பணம்’ என்பது கூடத் தெரியாது.  அவர்களைப் பொறுத்தவரை இந்த விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் கண்ணுக்கெட்டாத கற்பனைதான்! 

அறுபத்து நான்காவது ஆண்டு விடுதலை நாள் விழாவில் மன்மோகன்சிங்கு எப்படிப் பேசியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பதன் கற்பனைதான் இது!
                        ‘சகோதர சகோதரிகளே!  நீங்கள் எல்லோரும் உணவுப்பொருள் விலை பற்றிக் கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!  நம் நாட்டில் அறுபத்தைந்து கோடிப் பேர் உழவர்களாகவும் உழவுக்கூலிகளாகவும் இருக்கிறீர்கள்!  ஆனால் பாருங்கள்!  உங்களுடைய மொத்த உழைப்பினால் பதினெட்டு விழுக்காட்டிற்கும் குறைவான அளவில்தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு உதவுகிறீர்கள்!  தகவல்தொழில்நுட்பத்துறையைப் பாருங்கள்!  மக்கள் தொகையில் 0.2 விழுக்காடு தான் இருக்கும் அவர்களால் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஐந்து விழுக்காட்டளவு உதவி கிடைக்கிறது.  உங்களையும் அவர்களையும் சமமாக எப்படி ஒப்பிடுவது ?
என்னருமைக் குடிமக்களே!  நூறு கோடிஸ்வர இந்தியர்களின் கைகளில் நாட்டின் இருபத்தைந்து விழுக்காட்டு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) இருக்குமாறு நம்முடைய பெருமைமிக்க இந்தியாவை உருவாக்கி வருகிறோம்.  சொத்து ஒரே இடத்தில் இருப்பது தானே நல்லது?  பத்துப்பேர் சேர்ந்து சமைத்தால் சாப்பாடு சுவையாக இருக்காது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்!  ஆகவே நமது கோடிஸ்வரர்களும் அவர்களுடைய சொந்தங்களும் அவர்களுக்கு நெருக்கமான அரசியலாளர்களும் நன்றாக வாழுமாறு நாம் பார்த்துக்கொள்கிறோம். 
             இவற்றை எல்லாம் குடியாட்சி மூலம் மட்டும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  ஆகவேதான் கனிமவளம் நிறைந்த பகுதிகளில் வாழ்வோரை இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஆயுதப்படை, தொழிற்சாலைப் பாதுகாப்புப்படை, இந்தோ திபெத்தியப் படை எனப் பல படைகளைக் கொண்டு நொறுக்கி வருகிறோம்.  இந்த வகை ஆய்வுகளை நாகலாந்து, மணிப்பூர், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் தான் தொடங்கினோம். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை.  ஆகவே தான் குடியாட்சி அங்கே வர வேண்டும் என்பதற்காக அரைக் கோடிப் பேருக்கும் அதிகமான இராணுவ வீரர்களைக் களம் இறக்கியிருக்கிறோம்.  அங்கே ஊரடங்கு இருந்த போது காவல்துறை மீது கற்கள் வீசிய காஷ்மீரிய இளைஞர்கள் அனைவரும் லஷ்கர் இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர்.  அவர்களும் வேலை கேட்டு இப்படிக் கற்களை வீசினார்களே தவிர விடுதலை கேட்டு இல்லை!  ஆனால் ஐயோ பாவம்!  அவர்களுடைய விண்ணப்பங்களைப் படித்து என்ன வேலை கொடுக்கலாம் என முடிவெடுக்கும் முன்பே நம்முடைய காவல்துறையால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்!  ஆகவேதான் இனிமேல் அவர்களைச் சுட்டுக்காயப்படுத்தினால் மட்டும் போதும் – கொல்ல வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறேன். 


Sep 9, 2010

ஏழைகளின் கண்ணீரில் மன்மோகனின் சந்தோஷம்

நாட்டில் உணவு தானியங்கள் வீணாவது குறித்து பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 12ம் தேதியன்று தானியங்கள் வீணாகும் முன்பு அவற்றை ஏழைகளுக்கு வழங்குங்கள் என மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அதற்கு பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார்,  உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுரைதான் வழங்கியுள்ளது. அது உத்தரவு அல்ல எனக்கூறினார். இதனை கண்டித்த நீதிபதிகள், தாங்கள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டோம். அறிவுரை வழங்கவில்லை என தெரிவித்தனர். இப்பிரச்சினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. உடனே மத்திய அமைச்சர் சரத் பவார், உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்தார்.
இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் பத்திரிக்கை ஆசிரியர்களை தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் கொள்கை விஷயங்களில் தலையீடுவதை உச்சநீதிமன்றம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது எ ன்பது நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என கூறியுள்ளார். ஒன்று மட்டும் புலனாகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கோ அல்லது அமெரிக்க நிறுவனங்களோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குங்கள் என நீதிமன்றம் கூறியிருந்தால், மன்மோகன் சிங் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பாவப்பட்ட ஏழைகளை பற்றி அவருக்கு என்ன கவலை. அவர்தான் பொருளாதார நிபுணர் ஆயிற்றே. ஏழைகள் என்ன தொழிலதிபர்களா ? கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள்தானே ? என்று எண்ணி விட்டார் போல் தெரிகிறது. எது கொள்கை முடிவு ? நமது நாட்டில் வீணாகி கொண்டிருக்கும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு கொடுங்கள் என்று சொல்வது தவறா ? அவருடைய வாதப்படியே வைத்து கொள்வோம். இந்தியாவில் 37 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு உள்ளனர். அவர்களுக்கு வழங்குவது எளிதான காரியமல்ல. அதற்குதான் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது என்பதை மன்மோகன் மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இலவச கலர் டிவி கொடுக்கமுடியும் என்பது சாத்தியம். நாட்டில் உள்ள அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்க முடியும் என்பது சாத்தியம். இப்படி இவர்களுக்கு வசதியாக உள்ள திட்டங்களை மட்டும் நிறைவேற்ற முடிகிறது. யாரையும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து சாப்பிட சொல்லுங்கள் என்று நாம் கேட்கவில்லை. ஒரு எலியோ, பூச்சியோ தின்று வீணாகி கொண்டிருக்கும் உணவு தானியங்களை 6 அறிவு படைத்த மனிதனுக்கு வழங்கினால் என்ன குறைந்தா போகிவிடுவார் மன்மோகன். பீகார் மாநிலத்திலும், மேற்கு வங்கத்திலும் மக்கள் பஞ்சத்தால் வாழ்வதாக அம்மாநில அரசுகளே அறிவித்துள்ள, அவர்களுக்கு இலவச உணவு என்பது அத்தியாவசிய உதவி என்பது பிரதமருக்கு தெரியாதா ? தெரியாமல்தான் கேட்கிறோம். கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பது  குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமே நடத்தாமல் மீனவர்களின் வாழக்கையை பற்றி கவலைப்படாமல் மத்திய அரசால் அனுமதி வழங்க முடிகிறது. ஒரு போபால் விஷவாயு கசிவிற்கு எல்லா கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுக்கின்றன. நல்ல விஷயம்தான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பணக்காரர்களின் கைப்பாவையாக திகழும் ம(ண்)மோகன் சிங்கை இந்த விஷயத்தில் யாரும் கண்டிக்கவில்லையே ? ஏன் என்றால் சிபிஐ மத்திய அரசின் கைவசம் உள்ளது. அதைவைத்து மிரட்டும் கலையை காங்கிரஸ் அரசு நன்றாக தெரிந்து கொண்டுள்ளது. ஒரு முறையாவது மக்களை நேரடியாக சந்தித்து தேர்தலில் நின்று ஜெயித்து இருந்தால்தானே ஏழைகள் பற்றி மன்மோகன் சிங் சிந்தித்து இருப்பார். அவருக்குதான் வசதியாக ராஜ்யசபா இருக்கிறதே, அங்கு ஜால்ராக்களின் தயவுடன் எம்.பி.யாகி விட்டவர்தானே மன்மோகன். ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது நாட்டில் உள்ள அரசு குடோன்களில் வீணாகும் தானியங்களை 10 லட்சம் ஏழைகளுக்கு 6 ஆண்டுகள் வரை கொடுக்க முடியும் என்று, இதனை நாம் சொல்லவில்லை மத்திய அரசின் விவசாயத்துறையின் புள்ளி விபரம்தான் கூறுகிறது. இதையெல்லாம் அறிந்து கொள்ள மன்மோகன் சிங்கிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுப்பதே நாட்டிற்கு நல்லது என்பது மேன்மக்களின் வாக்காக உள்ளது.
 
Related Posts with Thumbnails

Sample text