Aug 27, 2010

காவல்துறையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ?


அரசு பணி கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை போலீசார் முரட்டுத்தனமாக தாக்கி உள்ளனர். காவல்துறையின் இந்த இரக்கமற்ற நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கழுத்தில் வெற்றி பதக்கமும், கண்களில் ஏமாற்றமுமாக சோர்ந்து காணப்படும் இவர்கள் அனைவரும் மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள். அரசு பணி கோரி சென்னை அண்ணா சதுக்கம் அருகே நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்ட இவர்களை தாக்கிய போலீசார்,  சக்கர நாற்காலி, ஊன்றுகோல் போன்றவற்றையும் பறித்துள்ளனர்.கொட்டும் மழையில் இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்த அவர்களில் சிலர், 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து அனைவருக்கும் அறிவுரை கூறும் அரசு, காவல்துறையினரின் இந்த கருணையற்ற செயலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? இந்த செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதை பார்த்த முதல்வரின் மகள் கனிமொழி, தாம் நேரடியாக அவர்களிடம் குறை கேட்டதை ஏன் அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள், அந்த தொலைக்காட்சிக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்பதை எப்படி கனிமொழியிடம் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றுள்ளனர். பின்னர் அந்த டிவியின் செய்தியாளர்களை தொடர்பு கொண்டு கனிமொழியின் கனிவான பார்வையை தயவு செய்து ஒளிபரப்புங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதெல்லாம் சரிதாங்க... சட்டபேரவை நிகழ்ச்சிகள் மற்றும் முதல்வரின் அறிவிப்புகள் போன்றவற்றை கலைஞர் டிவிக்கும், சன் டிவிக்கும் மட்டும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள அதிகாரிகள் உண்மை உரைக்கல்லாக விளங்கும் மற்ற செய்தி நிறுவனங்களை இதுபோல் எப்போது மதிக்க வேண்டும் என்பதே பத்திரிக்கையாளர்களின் விருப்பம், அட இது ஒரு பக்கம் இருக்கட்டும். மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக குரல் கொடுக்கும் கருணாநிதியின் கீழுள்ள காவல்துறையே காட்டு மிராண்டி தனமாக நடந்துள்ளனரே ? அவர்கள் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன் ? பதில் கூறுவாரா தமிழின தலைவர் கலைஞர் ?

1 கருத்துக்கள்:

Anonymous said...

No one from government avanue ready to care this people... M.Karunanidhi have to care about his whole family, he dosen't have a time. Election, Congress, colation, vote bank, Oppositaion, Delhi, Srilankan tamils, top police officeals.. etc so everyone is controled by police, this kind of enveironment police become super power, but lawyers distrubing to stop that, thats a reason of attack on lawyes.

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text