Sep 29, 2010

மூடனின் புது நம்பிக்கை


மூட நம்பிக்கையை எதிர்ப்போம் என்று பொய் வேஷம் போட்டுக் கொண்டு திரியும் ஒரு மூடனின் நம்பிக்கை பற்றி ஒரு கதை வழியாக பார்ப்போம்.

Sep 28, 2010

காமன்வெல்த் போட்டி - ஒரு பார்வை


காமன் வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதால் பயன் என்ன ? இதனால் இந்திய வீரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் கிடைக்க போகிறதா ? இப்படி எண்ணற்ற கேள்விகள் நமக்கு எழுவது இயற்கையே, ஆனால் அடிமையின் மறுபிறப்பான பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சியில் இதை பற்றி காங்கிரஸ் தலைவர்களே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.


Sep 27, 2010

இரண்டு திரைப்படக் காட்சிகளும் சில சிந்தனைகளும்



காட்சி 1:
மன்னன்என்றொரு தமிழ்ப்படம்தமிழகத்தின் முன்னணி நடிகர் நடித்த படம் அதுகூலித் தொழிலாளியாகத் தொடக்கத்தில் வரும் நடிகர், பின்னர் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையின் முதலாளியின் மகளை மணப்பதன் மூலம் முதலாளியாகவும் ஆகிவிடுவார்கூலித் தொழிலாளியாக இருக்கும்போது இயல்பாக இருக்கும் அவர், முதலாளியான உடன் பெரும் 


Sep 26, 2010

யார் கடவுள் உயர்ந்தவர்


நேற்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  கடவுள் இல்லைஎன்று சொல்பவர்கள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை.  கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் தாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் அவர் கூறினார்.  அவர் கூறியதை நானும் சிந்தித்துப் பார்த்தேன்.  கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லோரும் கடவுள் வழியில் நடக்கிறார்களா என்ன? 

Sep 24, 2010

அயோத்தியும் ,சட்டமும் ஓர் அலசல்


பாபர் மசூதி கடந்த1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய ஒரு தொழுகை இடமாக இருக்கிறது.  வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச சன்னி ஜமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்தத் டிசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்) மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு இராமபெருமான் தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்என்று சொன்னார்கள்.


கடவுளுக்கே தீர்ப்பு - காமெடி கிளைமாக்ஸ்


சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்... ராமர் அங்குதான் பிறந்தார் அதனால் இந்துக்களுக்கு சொந்தம் என்று ஒரு கூட்டம் கூறுகிறது. மற்றொரு பக்கம் பாபர் மசூதி இருந்த இடம் என்பதால் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஒன்றை மட்டும் இரு கூட்டமுமே மறந்துவிட்டது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பவர்களிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி. மனிதனை படைத்த கடவுளுக்கு கூட மனிதனால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டுமா ?

Sep 22, 2010

முடிவு உங்கள் கையில் ?


யார் நம்மை ஆள வேண்டும் !

இன்றைய பதிவை ஒரு கதை வழியாகப் பார்ப்போமாமுன்னொரு காலத்தில் காசு, தியா என்னும் பெயருடைய இரண்டு நாடுகள் இருந்தனஇரண்டும் பக்கத்துப் பக்கத்து நாடுகள்இரண்டு நாடுகளுமே ஒரு கொடியவனிடம் அடிமையாக இருந்தனஅவற்றில் தியா நாடு இன்னொரு நாட்டை விட அளவிலும் மக்கள்தொகையிலும் பெரிய நாடு. காசு நாடு மிகவும் அழகான நாடு.   அந்த இரு நாடுகளிலும் திடீரென மக்கள் புரட்சி ஏற்பட்டு அக்கொடியவன் நாட்டை விட்டே ஓடி விடுகிறான்பின்னர் தியா நாட்டு மக்கள் எல்லாம் ஒன்று கூடி நமக்கென ஒரு குடியரசு அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறார்கள்அப்படியே குடியரசு அமைகிறது
காசு நாட்டிலோ பழைய காலத்து மன்னராட்சி தொடர்கிறது. அந்நாட்டிலும் மக்களாட்சி வேண்டும் மன்னராட்சி ஒழிய வேண்டும் என்னும் கருத்து மக்களிடையே பரவி வருகிறது.   அதற்காகச் சில தலைவர்கள் போராடி வருகிறார்கள்இதற்கிடையே தியா நாட்டிடம் இருந்து பிரிந்து போய் இருந்த சுதான் நாட்டின் உதவியுடன் பக்கத்தில் இருந்த சில மக்கள் சின்ன நாட்டின் மன்னன் அரி மீது படையெடுக்கிறார்கள்அரண்டு போன மன்னன் தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தியா நாட்டின் உதவியை நாடுகிறான்உடனடியாகத் தியா நாடு தன்னுடைய இராணுவத்தை அங்கு அனுப்பிப் போரிட்டு வெற்றி பெற்றுவிடுகிறதுஇவ்வெற்றிக்குப் பின் தன்னுடைய இராணுவத்தை அங்கேயே நிறுவிக் காசு நாட்டைத் தன்வசப்படுத்திக்கொள்கிறதுமன்னனும் சில நாட்களில் ஓடிப் போய் விடுகிறான்.  
காசு நாட்டு மக்களுக்கோ பெரிய குழப்பம் வந்து விடுகிறது.  ‘என்னடா இதுமன்னராட்சி வேண்டாம் என்று மன்னனை விரட்ட நினைத்தோம்இப்போது மன்னன் ஓடிப்போய்விட்டான்ஆனால் அவனுக்கு மாற்றாக இராணுவம் அல்லவா வந்துவிட்டதுஇப்படி நம்முடைய வாழ்க்கை ஆகிவிட்டதேஎன்று அம்மக்களுக்கு ஒரே வருத்தம்!  ‘நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம்.   உங்களுடைய இராணுவத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்!’ என்று தியா நாட்டை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிவிடுகிறார்கள்மன்னனுக்கு உதவுவது போல் உதவி மன்னனை விரட்டி விட்டால் அழகான காசு நாடு நமக்குக் கிடைத்து விடும் என்று கனவு கண்டுகொண்டிருந்த தியா நாட்டுக்கோ மக்கள் போராட்டம் புதிய தலைவலியாக அமைந்து விட்டதுயாருக்கும் தெரியாமல் இந்தச் சிக்கலை மூடி மறைத்து விடலாம் என்று முயன்று பார்த்ததுஆனால் தியா நாட்டின் நிலையை அறிந்த பிற நாடுகள் எல்லாம் திரண்டு வந்து விட்டன
         
          உடனடியாகப் பெரிய நாடு அமுக்கமாக ஒரு திட்டம் தீட்டியது.  ‘நாங்கள் ஒன்றும் காசு நாட்டைக் கைப்பற்றவில்லைஅந்த நாடு எங்களுக்குத் தேவையும் இல்லைஅந்நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கவிரும்புகிறார்களாதனி நாடாக இருக்க  விரும்புகிறார்களாஇல்லை வேறு நாட்டுடன் போக விரும்புகிறார்களாஎன்று நாங்கள் வாக்கெடுப்பு நடத்துவோம்என்று உலக நாடுகளிடம் கூறியதுபிற நாடுகளும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனஆனால் அதைச் செய்தால் எங்கே அழகான காசு நாடு நம்மை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சிக் கொண்டு தியா நாடு இன்று வரை அதைச் செய்யவே இல்லை. வாக்கெடுப்பு நடத்தாதது மட்டுமில்லைகாசு நாடு தனி நாடு இல்லைஅது எங்களுடைய ஒரு பகுதி என்று உரிமை வேறு கொண்டாடத் தொடங்கிவிட்டது
நீங்களே சொல்லுங்கள்தியா நாடு செய்வது சரியாகாசு நாடு யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தாமே முடிவு செய்ய வேண்டும்
இது கதையில்லை உண்மைஆமாம்! இக்கதையில் வரும் காசு நாடுதான் காசுமீர்தியா நாடுதான் இந்தியாஅந்த மன்னர் தான் அரிசிங்கு!  1948 ஆம் ஆண்டு சனவரி ஒன்றாம் நாள் இச்சிக்கலைப் பன்னாட்டு அவைக்குக் கொண்டு சென்ற இந்திய அரசு வாக்கெடுப்பு நடத்திக் காசுமீர்ச் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொன்னதுஆனால் இன்று வரை அதைச் செய்யவே இல்லைஇது மட்டுமில்லைஅம்மக்கள் தாம் அச்சிக்கலுக்குத் தீர்வு தர வேண்டும் என்று சொன்ன காசுமீர் தலைவர் சேக் அப்துல்லாவையும் ஏறத்தாழ பதினோர் ஆண்டுகள் இந்திய அரசு சிறையில்  அடைத்து விட்டது.  


இந்தியாவின் இச்சூழ்ச்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் பாகிசுதானும் காசுமீர் தனக்கே என்று கூறிவருகிறதுஇப்படி இந்தியாவின் ஆதிக்க வெறியாலும் பாகிசுதானின் ஆதிக்க வெறியாலும் பாழாகிப் போனது காசுமீர் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கைதான்ஒவ்வொரு நாளும் வீட்டு முன்னர் இராணுவத்தினர் துப்பாக்கியுடன் இருப்பதைச் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்

கிழக்குப் பாகிசுதானில் இருந்த மக்கள் பாகிசுதானில் இருந்து பிரிய விரும்பினார்கள். அப்போது மனமுவந்து சென்று அம்மக்கள் போராட்டத்தில் இருந்த நியாயத்தை மதித்து வங்காளத் தேசமாகப் பிரித்துக் கொடுத்த இந்தியா, காசுமீரிலும் அம்மக்களை மதித்திருக்க வேண்டாமா?   வங்காளத் தேச நாட்டு மக்களுக்கு ஒரு நீதிகாசுமீர் மக்களுக்கு ஒரு நீதியா
 
Related Posts with Thumbnails

Sample text