Aug 24, 2010

சட்டைசெய்யாத சட்டம்

ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கில், விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.
இரண்டு வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் அசாஞ்சுக்கு எதிராக கடந்த 20ம் தேதி கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஸ்வீடனின் அரசின் சட்டப்பிரிவு செய்தித் தொடர்பாளர் கிரெண் ரோசந்தர் தெரிவித்திருந்தார்.

பெண்கள் இருவர் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த ஜூலியன் அசாஞ்ச், இதுகுறித்து விக்கிலீக்ஸ்சின் டிவிட்டரில் தகவலைப் பகிர்ந்துகொண்ட போது, "இவை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இந்த விவகாரம் மிக ஆழமாக மனதை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது," என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது என கடந்த 21 ம் தேதி மாலை ஸ்வீடன் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் ஈவா ஃபின்னி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட அசாஞ்ச், பத்திரிகை சுந்தந்திரத்துக்காக போராடி வருபவர். தனது விக்கிலீக்ஸ் தளத்தில் மூலம் பல்வேறு அரசுகளின் ரகசியங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தியவர்.

ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான அமெரிக்க ராந்ணுவத்தின் சுமார் 15,000 ரகசிய ஆவணங்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் அண்மையில் வெளியிட்ட அசாஞ்ச், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கடுங்கோபத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. அட இது அயல்நாட்டு செய்தி
தமிழகத்தில் நிலைமையே வேறங்க... வார்த்தைக்கு வார்த்தை தன்னை பத்திரிக்கையாளன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதியின் அடக்கு முறை ஸ்டைலே வேறங்க... ஜுனியர் விகடனில் கழுகார் பகுதியில் பொட்டு சுரேஷ் என்பவர் குறித்து (அழகிரியின் வலதுகரம்) செய்தி வெளியானது. உடனே பத்திரிக்கை சுதந்திரத்திற்கு சவால் விடும் விதமாக தினமலர் நாளிதழில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம்னு விளம்பரம் வந்தது. கொதித்தெழுந்த தமிழக பத்திரிக்கையாளர்கள் பொட்டின் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தாங்க... கடைசியில் பொட்டின் வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் ஜுவியில் செய்தியா வெளியிட்டாங்க... பழைய கதையை சொல்லி ஃபோர் அடிக்காதீங்கன்னு சொல்லுவிங்கன்னு தெரியும். இதுல காமெடி என்னன்னா முதலமைச்சர் கிட்ட இதுபற்றி நேரடியாக புகார் கொடுக்க அனுமதி கேட்டாங்க... உடனே சிஎம் அனுமதி கொடுத்தாரு.. எப்ப தெரியுமா...ஜுவியில் மறுப்பு செய்தி ஸ்டைலில் கட்டுரை வந்தவுடன்...ஆனால் வழக்கு மட்டும் போடலிங்க ஏன்னா பொட்டுவின் ஆதரவாளர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவோம்னு சொன்னதுல்ல தப்புல்லன்னு சிஎம் நினைக்கிறார் போல... வாழ்க ஜனநாயகம், வெல்க சட்டம் ஒழுங்கு. வேதனையுடன் ஜுனியர் ரிப்போர்ட்டர்

0 கருத்துக்கள்:

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text